BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!
லாலிபாப் மிட்டாயால் வந்த வினை... குழந்தைகள் சண்டையாய் தொடங்கி இறுதியில் தம்பியைப் பலிகொடுத்த அக்கா! பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை!!!
ஒரு சாதாரண லாலிபாப் மிட்டாய் தகராறு, ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் அக்கா-தம்பி இடையே ஏற்பட்ட சண்டை எதிர்பாராத வகையில் உயிரிழப்பாக முடிந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறு தகராறில் தொடங்கிய சண்டை
தகவலின்படி, 11 வயது ஆரியன் மற்றும் அவனது 15 வயது அக்கா வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு லாலிபாப் மிட்டாயை யார் எடுப்பது என்ற சிறிய விவாதம் ஏற்பட்டது. வழக்கமான குழந்தைகள் சண்டை போலத் தொடங்கிய இந்த விவகாரம், சில நிமிடங்களில் வாக்குவாதமாகவும் பின்னர் மோதலாகவும் மாறியது.
திடீர் திருப்பம் – உயிரிழப்பாக முடிவு
இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளியில், ஆரியனின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயத்தின் தாக்கத்தில் அவன் அங்கேயே மயங்கி விழுந்து, பின்னர் உயிரிழந்தான். இந்த எதிர்பாராத நிலைமை, வீட்டில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மறைக்க முயன்ற சம்பவம் வெளிச்சம்
தம்பி இறந்துவிட்டதை கண்ட 15 வயது சிறுமி, பயத்தால் தற்கொலை போல காட்ட முயன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதற்காக அவனது உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளார். ஆனால், பிரேதப் பரிசோதனையில் சிறுவன் முன்பே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, தந்தையின் புகாரின் பேரில் சிறுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர். ஒருபுறம் மகனை இழந்த துயரம், மறுபுறம் மகள் சட்ட சிக்கலில் சிக்கிய நிலை – அந்தக் குடும்பத்தை முற்றிலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மாடு மேய்க்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! கொலை சம்பவத்தின் பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!!