சொகுசுவிடுதியில் துணை நடிகைகளை அடைத்து வைத்து, அரங்கேறிய அட்டூழியம்! போலீசாரிடம் சிக்கிய கும்பல்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

சொகுசுவிடுதியில் துணை நடிகைகளை அடைத்து வைத்து, அரங்கேறிய அட்டூழியம்! போலீசாரிடம் சிக்கிய கும்பல்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!



two-sub-actress-forced-to-sex-abuse-in-puducherry

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதி கோட்டகுப்பம். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக அப்பகுதியில் ஏராளமான மசாஜ் நிலையங்களும், சொகுசு விடுதிகளும் அமைந்துள்ளது.
இந்த புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்துருஜி என்பவர் கோட்டகுப்பம் கடலோர பகுதியில் விடுதி ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். 

சமீபகாலமாக கொரோனோவால் சுற்றுலா பயணிகள் யாரும் வராதநிலையில் அவரது விடுதிதொழில் பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அந்த விடுதியில் தவறான தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் விடுதியை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். பின்னர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்ட போது அங்கு இருபெண்கள் அடைத்து வைக்கப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் விடுதி உரிமையாளர் சந்துருஜி அவரது நண்பர் விஜயகுமார் மற்றும் அஜய் ஜோசப் ஆகியோரை கைது செய்தனர்.

arrest

 பின்னர் அந்தப் பெண்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்கள் வளசரவாக்கத்தை சேர்ந்த துணை நடிகைகள் என்பதும், பியூட்டிசியன் மற்றும் மசாஜ் தொழில் கற்றுத் தருவதாக சென்னையிலிருந்து அழைத்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட இருதுணை நடிகைகளும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.