பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்... உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்... அலறி துடித்த இளைஞர்..!
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்... உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்... அலறி துடித்த இளைஞர்..!
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பெண் ஒருவருக்கு இளைஞர் வலுக்கட்டாயமாக முத்தமிட, அந்த பெண், இளைஞரின் உதடுகளை கடித்து துப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து அவரை காப்பாற்றினர். மேலும், நாக்கு கடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அந்த இளைஞரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடந்த 4-ஆம் தேதி, வயல் வேலைக்குச் சென்ற போது குற்றவாளி பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட அந்த பெண் முதலில் முத்தம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய இளைஞர் முத்தம் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். முத்தம் கொடுக்க முயன்ற போது அந்த பெண் வாலிபரின் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பெண்ணின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து அவரை காப்பாற்றியுள்ளனர். வலியால் துடித்த இளைஞரின் உதட்டில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.