தினம் தினம் நரக வேதனை! எப்போ தான் தீர்வு கிடைக்கும்..? காட்டாறு வெள்ளத்திற்கு நடுவே சிறுவனை தோளில் தூக்கி கொண்டு ஓடும் நபர்...! பதைபதைக்கும் வீடியோ..!!!
தெலங்கானா மாநிலம் அசிபாபாத் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரமேரி மண்டலத்தில் உள்ள அனார்பள்ளி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கர்ஜன்வாடா கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
காட்டாற்று வெள்ளத்தை கடக்கும் மக்கள்
கர்ஜன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பொங்கி வழியும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து மறுகரைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக சிலர் ஆபத்தை பொருட்படுத்தாமல் வெள்ளத்தைக் கடந்து செல்கின்றனர். தெலங்கானா வெள்ளம் தொடர்பான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: அது பொண்ணா? இல்ல பொம்மையா... இப்படி பண்றாரு! பெண்ணை அடித்து முடியை பிடித்து தரதரவென இழுத்து சென்ற போலீஸ்காரர்...!அதிர்ச்சி வீடியோ..!!!
ஒவ்வொரு மழைக்காலத்திலும் தொடரும் சிக்கல்
மழைக்காலம் தொடங்கும் போதெல்லாம் இதேபோன்ற நிலை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அனார்பள்ளி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் கிராமத்தின் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிரந்தரப் பாலம் அமைக்க கோரிக்கை
வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்க வேண்டிய சூழல் இருப்பதால், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, அனார்பள்ளி ஆறு பகுதியில் நிரந்தரப் பாலம் அமைத்து, மழைக்காலத்திலும் பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்று தெலங்கானா அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ఆసిఫాబాద్ జిల్లాలో వాగు కష్టాలు
— TV9 Telugu (@TV9Telugu) September 19, 2026
కెరమెరి మండలంలో ఉధృతంగా ప్రవహిస్తున్న అనార్పల్లి వాగును ప్రమాదకరంగా దాటుతున్న కరంజివాడ గ్రామస్థులు
అధికారులు స్పందించి వాగుపై నుండి రాకపోకలకు శాశ్వత పరిష్కారం చూపాలని కోరుతున్న స్థానికులు @Collector_KB @KomatireddyKVR @VivekVenkatswam… pic.twitter.com/YA5AwKAsHc
இதையும் படிங்க: சாவிலும் பிரியாத உண்மை காதல்! உயிருடன் மண்ணில் புதைக்கப்படும் காதலர்கள்...? வைரலான வீடியோவால் இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!!