8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்! துன்புறுத்தி வந்த ஆசிரியருக்கு கிராமத்தினர் கொடுத்த வேறலெவல் தண்டனை!

8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்! துன்புறுத்தி வந்த ஆசிரியருக்கு கிராமத்தினர் கொடுத்த வேறலெவல் தண்டனை!



teacher-punished-by-villagers-who-gave-love-letter-and

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த ஆசிரியருக்கு கிராம மக்கள் மொட்டை அடித்து, முகத்தில் கரியை பூசி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் மண்பூர் என்ற கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 8ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர் காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

மேலும் தொடர்ந்து அந்த மாணவியை வற்புறுத்தி, துன்புறுத்தியும் வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் உனது குடும்பத்தினருக்கு ஆபத்து வரும் எனவும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து தெரியவந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துவந்த ஆசிரியரை மடக்கிபிடித்து அவருக்கு மொட்டை அடித்து முகத்தில் கரியை பூசி கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். 

love letter

இதுகுறித்து தெரியவந்த நிலையில் அங்கு விரைந்த போலீசார்கள் அத்தகைய செயலில் ஈடுபட்ட கிராமத்தினர் 10 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.