அரசு ஊழியர்களுக்கு ஒன்றல்ல இரண்டு மகிழ்ச்சியான செய்தி! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...



tamilnadu-free-insurance-for-government-employees

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய இலவச ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு – முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு, ஊழியர்களின் நலனைக் கருதி மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி (இலவசமாக) ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்கும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 முன்னணி வங்கிகளுடன் கையெழுத்தானது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

இலவச ஆயுள் காப்பீடு:

இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ. 10 லட்சம் வரை தொகை வழங்கப்படும்.

விபத்து காப்பீடு:

விபத்தில் மரணமடைந்தால் அல்லது நிரந்தர ஊனமடைந்தால் ரூ. 1 கோடி வரை வழங்கப்படும்.

மகள்களுக்கு திருமண நிதி:

இறந்த அரசு ஊழியரின் இரு மகள்களுக்கு தலா ரூ. 5 லட்சம், மொத்தம் ரூ. 10 லட்சம்.

இதையும் படிங்க: புதிய 20 ரூபாய் நோட்டு வெளியீடு! பழைய 20 ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாதா? ஆர்பிஐ அறிவிப்பு!

மகனுக்கு கல்வி நிதி உதவி:

உயர் கல்விக்காக ரூ. 10 லட்சம் வரை நிதி உதவி.

வட்டி சலுகைகள்:

வீட்டுக் கடன், கல்விக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கு சிறப்பு வட்டி சலுகைகள்.

இந்த முக்கிய சேவைகளை வழங்க முன்வந்துள்ள வங்கிகள்:

1. பாரத ஸ்டேட் வங்கி (SBI)

2. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)

3. இந்தியன் வங்கி

4. கனரா வங்கி

5. ஆக்ஸிஸ் வங்கி

6. பாங்க் ஆப் பரோடா

7. யூனியன் பாங்க் ஆப் இந்தியா

இந்த வங்கிகள், அரசு ஊழியர்களின் ஊதியக் கணக்குகளை பராமரிக்கும் பட்சத்தில் எந்தவித கட்டணமும் இன்றி இந்த சலுகைகளை வழங்க தயாராக உள்ளன.

தமிழ்நாடு – ஒரு முன்னோடியான நவீனத் திட்டம்!

ஐரோப்பிய நாடுகளுக்குச் சமமாக, நவீன நலத்திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசு, இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் எதிர்கால நலனை உறுதிப்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: "என் பேர சொல்லி லஞ்சம் வாங்குறியா?" - உதவியாளரை செருப்பால் அடித்த பெண் அதிகாரி.!!