இனி இனிப்பு கடைகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கலாம்.! மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு..!

இனி இனிப்பு கடைகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கலாம்.! மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு..!



Sweet shop open at morning 8 am to evening 4 pm

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் கொரோனோ என்ற கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்ப்படுத்தி வருகின்றனர்.

மேலும் முதலில் 21 நாட்கள் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூட வேண்டும் என்ற உத்தரவுடன் ஊரடங்கை பிறப்பித்தது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் பிரதமர் மோடி மே3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தார்.

West chief ministar

இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சில தொழிகளுக்கு அனுமதி வழங்கி நேரக்கட்டுப்பாட்டை விதித்து வருகிறது. அதேபோல் தான் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவர்கள் இனி இனிப்பு கடைகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கலாம் என்று கூறியுள்ளார்.