கேட்கவே மனசு பதறுது!! மனைவியின் பிறப்புறுப்பை ஊசிநூலால் தைத்த கணவன்.. பரபரப்பு சம்பவம்..
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட கணவன், மனைவியின் பிறப்புறுப்பை ஊசி நூலால் தைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள மடா கிராமத்தில் 55 வயதான நபர் ஒருவர் தனது 35 வயது மனைவியுடன் வசித்துவந்தார். மனைவியின் நடத்தை மீது அவருக்கு சந்தேகம் வரவே, இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், தனது மனைவியை அந்த நபர் அடித்து கொடுமைப்படுத்திவந்துள்ளார்.
ஒருகட்டத்தில் மனைவியின் மீதான சந்தேகம் அதிகரித்தநிலையில், தனது மனைவியை ஒரு அறையில் போட்டு பூட்டி, அவரது பிறப்புறுப்பை ஊசி நூல் வைத்து தைத்துள்ளார். இதில் வலியால் அலறிய அந்த பெண், அங்கிருந்து தப்பித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
பெண் கொடுத்த புகாரை அடுத்து, அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அந்த பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.