காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
பாவி.. பெத்த தாய்யை ஒரே அடியில் அடித்து கொன்ற மகன்.. சுருண்டு விழுந்து உயிரைவிட்ட தாய்.. வீடியோ

பெற்ற தாயை ஒரே அடியில் அடித்து கொலை செய்த மகனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் துவாரகா பகுதியில் வயதான தாய் ஒருவரிடம் அவரது மகனும், மருமகளும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வயதான தாயின் மருமகள் ஏதோ விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தபோது அவரது அருகில் நின்றுகொண்டிருந்த அந்த வயதான பாட்டியின் மகன் அவரது தாயாரை ஓங்கி கண்ணத்தில் அடித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த பாட்டி பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கீழே விழுந்தநிலையில், அவரது மருமகள் பதறிப்போய் தனது மாமியாரை எழுப்ப முயல்கிறார். ஆனால் அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லாதநிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில்அனுமதித்துள்ளனர். அங்கு அந்த பாட்டியை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடந்த இந்த சம்பவமானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது தாயாரை அடித்து கொலை செய்துவிட்டு, இதனை யாரும் பார்க்கிறார்களா என அவரது மகன் சுற்றும் முற்றும் நோட்டமிடுகிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.
#Verified
— Saahil Murli Menghani (@saahilmenghani) March 16, 2021
👉Toxic story coming in from Delhi
👉An argument broke out between a man, his wife & his mother
👉Caught on camera- Son then slapped his 76 year year old mother
👉She was taken to a nearby hospital which declared her brought dead pic.twitter.com/AajwTWuBq8