மணப்பெண்ணை ஹெலிகாப்டரில் கூட்டிவந்த மாப்பிளை வீட்டார்!! கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம்..
மணப்பெண்ணை ஹெலிகாப்டரில் கூட்டிவந்த மாப்பிளை வீட்டார்!! கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம்..
மணப்பெண் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் தனது மாமியார் வீட்டிற்கு அழைத்துவரப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் இருந்து மணப்பெண் ஒருவர் ஹெலிகாப்டரில் தனது மாமியார் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, பார்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு தலித் குடும்பம் முதல் முறையாக மருமகளை வீட்டிற்கு அழைத்து வர தனி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளது.
டிசம்பர் 14 அன்று பார்மர் மாவட்டத்தில் எல்லைக்கு அருகில் உள்ள பிதானியோன் கி தானியில் தியாவை தருண் மேக்வால் திருமணம் செய்து கொண்டார். புதுமணத் தம்பதிகள் அடுத்த நாள் ஹெலிகாப்டரில் பார்மர் நகரில் உள்ள ஜசேதர் தாமுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்துள்ளனர்.
மருமகளை ஹெலிகாப்டரில் அழைத்துவருவதை காண கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டதால், அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஃப்ரீ பிரஸ் ஜர்னல் அறிக்கையின்படி, விசேஷ நாட்களில் கூட குதிரை சவாரி செய்ததற்காக அருகில் உள்ள தலித் மாப்பிள்ளைகள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள். எனவே, குடும்பத்தினர் வேறு மாற்று வழியை ஆராய்ந்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர்.
இருப்பினும், அவரது மாமியார் முன்பதிவு செய்த முதல் ஹெலிகாப்டர் கடைசி நேரத்தில் மறுத்துவிட்டது, எனவே அவர்கள் ஒரு ஹெலிகாப்டரில் மருமகளை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற அவரது மாமியாரின் கனவை நிறைவேற்ற கூடுதல் ரூ 1 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.