வாழத்தான் விடல.. எங்களை ஒரே இடத்துலையாவது புதைச்சிடுங்க - கள்ளக்காதல் ஜோடியின் பகீர் கடிதம்.!

வாழத்தான் விடல.. எங்களை ஒரே இடத்துலையாவது புதைச்சிடுங்க - கள்ளக்காதல் ஜோடியின் பகீர் கடிதம்.!



Pondicherry Karaikal Indra Nagar Illegal Affair Couple Suicide Wrote Letter

கள்ளக்காதல் வயப்பட்ட எங்களை வாழத்தான் விடலை, ஒரே இடத்திலையாவது இறந்ததும் புதைத்திடுங்கள் என கள்ளக்காதல் ஜோடி கடிதம் எழுதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் இந்திரா நகர் பகுதியை சார்ந்தவர் காஜா. இவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி விசுவத் நாச்சியம்மாள் (வயது 29). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். காஜாவின் எதிர் வீட்டில் வசித்து வருபவர் அபுதாஹிர் (வயது 30). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

அபுதாகிருக்கும் - விசுவத் நாச்சியளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இந்த விஷயம் காஜா மற்றும் அவரது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் விசுவத் நாச்சியம்மாளை கண்டித்து இருக்கின்றனர். 

Pondicherry

இதனை கேட்காத கள்ளக்காதல் ஜோடி, வழக்கமாக சந்திக்கும் உறவினர் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளனர். பின்னர், மாலை வரை விசுவத் நாச்சியம்மாள் வீட்டிற்கு திரும்பாத காரணத்தால் குழந்தைகள் தாயை தேடியுள்ளனர். பின்னர், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று பார்க்கையில், அபுதாஹிர் - விசுவத் நாச்சியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இருவரும் மின்விசிறியில் ஒரே கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக காரைக்கால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், கள்ளகாதலால் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இருவரும் எழுதி வைத்த கடிதத்தில், "நாங்கள் வாழ எதிர்ப்பு உள்ளது. அதனால் சாவில் ஒன்றாக இணைகிறோம். முடிந்தால் எங்களை ஒரே இடத்தில் புதைத்து விடவும்" என எழுதப்பட்டு இருந்துள்ளது.