மின்சாரம் பாய்ச்சி முதிய தம்பதி தற்கொலை.. பதறவைக்கும் சம்பவம்..!

மின்சாரம் பாய்ச்சி முதிய தம்பதி தற்கொலை.. பதறவைக்கும் சம்பவம்..!



police-investigated-aged-peoples-mysterious-suicide

முதிய தம்பதிகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி அவர்களே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகாமையில் சேர்த்தலா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ் (வயது 71). இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியராக பணியாற்றிய நிலையில், தனது மனைவி சியாமளாவுடன் வசித்து வந்துள்ளார்.

தம்பதிகளுக்கு பாக்யா என்ற மகள் இருக்கிறார். அவர் தற்போது திருமணமாகி அவரது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், ஹரிதாஸ்-சியாமளா தம்பதியினர் இருவரும் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை.

மேலும், அவர்களின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் படுக்கையறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

KERALA

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து சேர்த்தலா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இருவரும் தங்களது உடலில் மின் வயர்கள் சுற்றி மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இருப்பினும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழ இது கொலையா? அல்லது தற்கொலையா? எனவும், தற்கொலையாக இருந்தால் காரணம் என்னவாக இருக்கும்? என்று பல கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.