நீங்கள் ஒரு சிறந்த போராளி.! இங்கிலாந்து பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி ஆறுதல்..!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், இங்கிலாந்து பிரதமருக்கு தனது ஆறுதலை கூறியுள்ளார் பிரதமர் மோடி.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமருக்கு டிவிட்டர் மூலம் தனது ஆறுதலை கூறியுள்ளார் பிரதமர் மோடி.
நீங்கள் ஒரு சிறந்த போராளி, இந்த சவாலையும் சமாளிப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும், ஆரோக்கியமான இங்கிலாந்தை உருவாக்க தனது வாழ்த்துக்களை கூறிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Dear PM @BorisJohnson,
— Narendra Modi (@narendramodi) March 27, 2020
You’re a fighter and you will overcome this challenge as well.
Prayers for your good health and best wishes in ensuring a healthy UK. https://t.co/u8VSRqsZeC