அம்மாவாக மாறிய அக்கா! வகுப்பறையில் ஒரு கையில புத்தகம்.... இன்னொரு கையில குழந்தை! கஷ்டம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழும் காட்சி.... 3 தம்பிகளை வளர்க்க பாடுபடும் 9-ஆம் வகுப்பு சிறுமிமின் வீடியோ...!!!



nepal-schoolgirl-asmita-tamang-viral-story

நேபாளத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி அஸ்மிதா தமாஙின் வாழ்க்கைப் போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது படிப்பை தொடர்வதோடு, மூன்று இளைய தம்பிகளை கவனித்துக்கொண்டு வரும் அவரது கதை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி வகுப்பறையில் குழந்தையை கையில் வைத்தபடி பாடம் கவனிக்கும் வீடியோ பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

படிப்புடன் குடும்பப் பொறுப்பும்

பொதுவாக பள்ளி மாணவர்கள் படிப்பு, நண்பர்கள் மற்றும் எதிர்கால கனவுகளில் கவனம் செலுத்தும் வயதில், அஸ்மிதா குடும்பத்தின் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார். தனக்கு இளைய மூன்று தம்பிகளை கவனித்துக்கொள்வதுடன், தனது கல்வியையும் விடாமல் தொடர்ந்து வருகிறார். இந்தச் சூழ்நிலையில் அவர் மேற்கொண்டு வரும் முயற்சி பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

வகுப்பறையில் பதிவான உருக்கமான காட்சி

இணையத்தில் வெளியாகியுள்ள வைரல் வீடியோவில், ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு வகுப்பில் அமர்ந்திருக்கும் அஸ்மிதாவைக் காண முடிகிறது. வீட்டுப் பொறுப்புகளும் படிப்பின் அழுத்தமும் ஒருசேர அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில் வகுப்பறையிலேயே கண்ணீர் விட்டு அழும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தவெக அரசை குறிவைத்து மு.க.ஸ்டாலின் போட்ட பதிவை பாருங்க....! இணையத்தில் செம வைரல்...!!!

உலகம் முழுவதும் ஆதரவு குரல்

அஸ்மிதாவின் அசாத்திய தைரியம் மற்றும் பொறுப்புணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், இத்தகைய சவாலான சூழ்நிலைகளில் வாழும் குழந்தைகளுக்கு அரசு மற்றும் சமூக அமைப்புகள் கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. சிறுவயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிலை கவலைக்குரியது என பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: வேதனையின் உச்சம்! பெண்களை தொட்டால் மரணம்னு பயம் வரணும்! கோவை சிறுமி விவகாரத்தில் கதறி அழுது ஆவேசமாக பேசிய நபர்..... வைரலாகும் வீடியோ..!!!