17 வயது மகளை சீரழித்த தந்தை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

17 வயது மகளை சீரழித்த தந்தை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Mumbai Father Raped 17 Aged Minor Girl 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். 

இந்நிலையில், சிறுமியின் பள்ளிக்கு வருகை தந்த காவல் துறையினர், சிறுமிகள் அதிகம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதும், சமூக வலைத்தளத்தில் முகமறியா நபரின் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கின்றனர். 

அச்சமயம் சிறுமி தனது தந்தையால் தான் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட பதைபதைப்பு தகவலை தெரிவித்து இருக்கிறார். விசாரணை நடத்திய காவல் துறையினர் உண்மையை உறுதி செய்ய, சிறுமியின் தந்தை போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.