விடுதிக்குள் நுழைந்த நாய்.... அதை விரட்ட கம்பியோடு ஓடிய வாலிபர்! நொடி பொழுதில் தீப்பிடித்து உடல்கருகி பலி! அதிர்ச்சி காட்சி...!!!
மத்தியப் பிரதேசம் கஜுராஹோவில் விடுதி வளாகத்தில் நடந்த துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயை விரட்ட முயன்ற இளைஞர், தவறுதலாக உயர் அழுத்த மின்கம்பியில் இரும்புக் கம்பி பட்டதால் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார். இந்த காட்சி முழுவதும் சிசிடிவியில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.
நாயை விரட்ட முயன்றபோது விபத்து
சத்தர்பூர் மாவட்டத்தில், ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதிக்குள் நாய் ஒன்று நுழைந்ததாக தகவல். அதை வெளியேற்ற அங்கு இருந்த இளைஞர், நீளமான இரும்புக் கம்பியை எடுத்துச் சென்றார். விடுதியின் சுற்றுச்சுவரை அண்மித்து சென்றபோது, கம்பியை மேலே தூக்கியதே ஆபத்தாக மாறியது.
உயர் அழுத்த கம்பி உரசியதில் தீப்பொறி
தகவலின்படி, அந்த இரும்புக் கம்பி மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டவுடன் பெரிய தீப்பொறி கிளம்பியது. சில விநாடிகளில் மின்சாரம் தாக்கியதால், இளைஞர் உடனடியாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். தாக்கம் கடுமையாக இருந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பேருந்தில் இதுக்கா இப்படி ஒரு சண்டை! நடத்துனரை சரமாரியாகத் அடித்து தாக்கிய சிசிடிவி காட்சி!
சிசிடிவி காட்சி வைரல்
அதிர்ச்சி சத்தம் கேட்டவுடன் விடுதி ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தபோது, இளைஞர் மயங்கிக் கிடந்தார். உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த CCTV காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விடுதியை ஒட்டிய பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக சென்றதா, அல்லது கவனக்குறைவா காரணம் என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
#WATCH | Youth Di*s After Getting Electrocuted While Trying To Chase Dog Away With An Iron Rod At A Resort Near Khajuraho Railway Station In #Chhatarpur#MadhyaPradesh #MPNews #IndiaNews pic.twitter.com/AIlfXS7wsk
— Free Press Madhya Pradesh (@FreePressMP) April 15, 2026