பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த தாய்! வீடு திரும்பியபோது 4 வயது மகளுக்கு நடந்த கொடூரம்....தனியாக தவித்த பிஞ்சு குழந்தை !!!
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தாத்தா மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தாய் மருத்துவமனையில் இருந்தபோது நடந்த கொடூரம்
மொரேனா மாவட்டத்தின் ஜௌரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணு கா புரா கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, சிறுமியின் தாய் கடந்த மாதம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் வீட்டில் இருந்த 4 வயது குழந்தையை, அவரது தாத்தா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாய் வீட்டில் இல்லாத சூழலை பயன்படுத்திக் கொண்டு இந்தச் செயல் நடந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் சில வாரங்கள் வெளியில் தெரியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!
உடல்நல பாதிப்பால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
பிரசவத்திற்குப் பிறகு தாய் வீட்டிற்கு திரும்பியபோது, தனது மகள் தொடர்ந்து வலி மற்றும் இரத்தப்போக்கால் அவதிப்பட்டதை கவனித்துள்ளார். இதையடுத்து குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
மருத்துவ பரிசோதனையில், குழந்தி மீது பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதன்பின் தாய் குழந்தையிடம் பேசியபோது, தாத்தா தன்னை துன்புறுத்தியதாக சிறுமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் தீவிர விசாரணை
சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக ஜௌரா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து ஜௌரா போலீசார் மருத்துவமனை மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான முதியவரை கைது செய்யும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.