காட்டுயானையின் வாலை பிடித்து இழுத்து விளையாடிய இளைஞர்..! வைரல் வீடியோ..!

காட்டுயானையின் வாலை பிடித்து இழுத்து விளையாடிய இளைஞர்..! வைரல் வீடியோ..!


Man pull elephant tail video goes viral

மனிதர்களுக்கு நெருக்கமான விலங்குகளில் ஓன்று யானைகள். மனிதர்கள் இருக்கும் இடத்திலையே மனிதர்களுடன் இணைந்து வாழக்கூடிய விலங்குகளில் ஓன்று யானைகள். எல்லா யானைகளும் அப்படி பட்டவை கிடையாது. நன்கு பழக்கப்பட்ட யானைகள் மட்டுமே மனிதர்களுடன் நெருங்கி பழக்கூடியது.

மனிதர்களால் பழக்கப்படும் யானைகள் கூட சில நேரங்களில் மதம் பிடித்து பலரையும் கொன்றுவிடுகிறது. அப்படி இருக்க, விவசாய நிலம் ஒன்றுக்குள் புகுந்த காட்டு யானை ஒன்றை இளைஞர் ஒருவர் வாலை பிடித்து இழுத்து அதை வெறுப்பேற்றிய சம்பவம் நந்துள்ளது.

மேற்கு வாங்க மாநிலத்தில் விவசாய நிலத்தில் உணவு தேடி காட்டு யானை ஓன்று புகுந்துள்ளது. இதனை கண்ட கிராம இளைஞர்கள் சிலர் யானையை விரட்டும் நோக்கில் யானையின் பின்னால் சென்றுள்ளனர். அதில் ஒரு இளைஞர் மட்டும் யானையின் வாலை பிடித்து இழுத்துள்ளார்.

யானை நல்ல மூடில் இருந்ததோ என்னவோ, அந்த இளைஞரை ஒன்றும் செய்யாமல் முறைத்துவிட்டு சென்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.