குளிரில் நடுநடுங்கிய நாய்க்குட்டிகள்! கடவுள் மனம் படைத்த நபர் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!!

குளிரில் நடுநடுங்கிய நாய்க்குட்டிகள்! கடவுள் மனம் படைத்த நபர் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!!



man-help-to-dogs-video-viral

தற்காலத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதுடன், பார்ப்போருக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தும். மேலும் அவ்வப்போது விலங்கு மற்றும் பறவைகளுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்களின் சிலரது வீடியோவும் உலா வரும்.

இந்த நிலையில் தற்போது குளிரில் நடுங்கும் நாய் குட்டிகளை குளிர் காயவைக்க விறகு கட்டைகளை வைத்து நெருப்பூட்டி நபர் ஒருவர் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வட இந்தியா முழுவதும் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் நாய்க்குட்டிகள் சில குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்துள்ளது.

அதனைக் கண்ட கருணை மனம் படைத்த நபர் ஒருவர் விறகுகளை அடுக்கி வைத்து அதில் நெருப்பிட்டு தீ மூட்டி அந்த நாய்குட்டிகளை குளிர்காய வைத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.