சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
மனைவியுடன் தவறான உறவு... கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவர்... பதப்பதைக்க வைக்கும் சம்பவம்.!
கர்நாடக மாநிலம் சிக்க பல்லாபூர் மாவட்டத்தில் மனைவியுடன் தவறான உறவில் இருந்த நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பட்லஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலா. விஜய்க்கு மாதேஷ் என்ற நண்பர் இருக்கிறார். மாலாவுக்கும் மாதேஷுக்கும் இடையே தவறான உறவு இருந்திருக்கிறது.

இதனை விஜய் பலமுறை கண்டித்தும் மாரியேஷும் மாலாவும் தங்களது உறவை தொடர்ந்து உள்ளனர.. இதனால் பாத்திரத்தில் இருந்த விஜய் மாறீசை பழி வாங்குவதற்காக தனது மற்றொரு நண்பரான ஜானுடன் சேர்ந்து திட்டம் தீட்டி இருக்கிறார்.
அந்தத் திட்டத்தின் படி மாதேசி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை நன்றாக மது குடிக்க வைத்து பின்னர் அவருடைய கழுத்தை அறுத்து ரத்தத்தை கொடுத்திருக்கிறார் இந்த சம்பவத்தை அவருடைய நண்பர் ஜான் செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாரீஸ் மயங்கிய பின் ஜான் மற்றும் விஜய் காட்டிலிருந்து தப்பி இருக்கின்றனர். அந்தப் பகுதி வழியாக சென்ற மக்கள் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர் . காவல்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் விஜய்யை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாதேஷின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த வீடியோவை ஜான் சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.