2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்காக சிறை.! ஜாமினில் வந்த குற்றவாளி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை.!

2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்காக சிறை.! ஜாமினில் வந்த குற்றவாளி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை.!



man abused young girl second time

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் பதன் பகுதியை சேர்ந்த விவேக் பட்டேல் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2020-ம் ஆண்டு விவேக் பட்டேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், விவேக் பட்டேல் கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த விவேக் பட்டேல் 2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த அதே இளம்பெண்ணின் வீட்டிற்குள் கடந்த மாதம் அத்துமீறி தனது நண்பனுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டி  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

மேலும், அங்கு நடந்த கொடுமையை வீடியோவாக எடுத்த விவேக் பட்டேல், தன் மீது ஏற்கனவே கொடுத்த புகாரை திரும்பப்பெறும்படியும், இல்லாவிட்டால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டியுள்ளான். இந்தநிலையில்  பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு மீண்டும் நடந்த கொடூரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக் பட்டேல் மற்றும் அவனது நண்பனை தீவிரமாக தேடி வருகின்றனர்.