ஒரே இரவில் தலைகீழான வாழ்க்கை! தங்கம், வெள்ளியை வைத்து ரீல்ஸ் போட்ட பெண்! அதிகாலை காத்திருந்த பேரதிர்ச்சி... தலையில் துண்டை போட்டு கதறல்! வைரலாகும் வீடியோ..!!!
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியில் பிரபல யூடியூபர் ரச்னா குர்ஜாரின் வீட்டில் லட்சக்கணக்கான மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தனது நகை சேகரிப்பை அடிக்கடி வீடியோக்களாக பகிர்ந்து வந்த நிலையில், அதையே அடிப்படையாக வைத்து கொள்ளையர்கள் திட்டமிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நகை வீடியோக்களை வைத்து போட்ட திட்டம்
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகம் அறியப்படும் ரச்னா குர்ஜார், தனது வீடியோக்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காட்சிப்படுத்தி அவற்றின் மதிப்பையும் பகிர்ந்து வந்துள்ளார். இந்த பதிவுகள் ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றிருந்தன. தகவலின்படி, கொள்ளையர்கள் அந்த வீடியோக்களை கவனமாக ஆய்வு செய்து, வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே தகவல் சேகரித்ததாக கூறப்படுகிறது.
சிசிடிவி திருப்பி வைத்து வீட்டிற்குள் நுழைவு
சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டை குறிவைத்து வந்த மர்ம நபர்கள், வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை வேறு திசைக்கு திருப்பி வைத்துள்ளனர். அதன்பின் பாதுகாப்பு வேலிகளை வெட்டி உள்ளே நுழைந்த அவர்கள், வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாதபடி அறைகளை பூட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என்ன நடந்தாலும் பரவாயில்லை.... மருத்துவமனையில் தலையில் கட்டு, முகத்தில் காயத்துடன் பெண் செய்த காரியத்தை பாருங்க! கொந்தளிக்கும் இணையவாசிகள்!!!
பின்னர் வீட்டில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், தங்க நகைகள், மாங்கல்யம், மோதிரங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீடியோக்கள் மீண்டும் வைரல்... டிரோல் செய்யும் நெட்டிசன்கள்
மறுநாள் காலை கொள்ளை நடந்தது தெரியவந்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரச்னா குர்ஜார் முன்பு வெளியிட்ட சமூக வலைதள நகை வீடியோக்கள் மீண்டும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பலர் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை பகிர்ந்து வரும் நிலையில், சிலர் கமெண்ட் பகுதியில் அவரை டிரோல் செய்து பதிவிட்டு வருவது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.