மத்திய பிரதேசம்: ஆட்டை கூட்டு பலாத்காரம் செய்தவர் கைது... மற்றொருவருக்கு வலைவீச்சு.!



madhya-pradesh-man-held-for-gang-rape-a-goat-police-sea

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டு நபர்கள் சேர்ந்து ஆட்டை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது  இது தொடர்பாக காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான ஆடுகளை  மேய்ப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார் . அப்போது மந்தையில் இருந்த ஒரு ஆடை காணவில்லை என்று தேடி இருக்கிறார்.

madhyapradesh

மறைவான இடத்தில் அந்த ஆட்டை பிடித்து வைத்த இரண்டு நபர்கள்  ஆடுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டின் உரிமையாளரை கண்டதும் அவர்கள் ஆட்டை விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர் . இது தொடர்பாக அந்த ஆட்டின் உரிமையாளர் காவலர்களிடம் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை ஒரு நபரை கைது செய்து இருக்கிறது மேலும் மற்றொரு நபர்  தலைமறைவாக உள்ளார். அவரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.