முதியவர் தலையில் முளைத்த கொம்பு! வெட்ட வெட்ட திரும்ப வருது.... அதிரவைக்கும் காரணம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!!
மத்தியப் பிரதேசத்தில் ஒருவரின் தலையில் ஆண்டுகள் கடந்தும் வளர்ந்த ‘கொம்பு’ போன்ற கட்டி மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2014-ல் ஏற்பட்ட சிறிய காயத்துக்குப் பிறகு தொடங்கிய இந்த வளர்ச்சி, பின்னர் 10 சென்டிமீட்டர் நீளத்திற்கு உயர்ந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது.
சிறிய காயம்... பெரிய மாற்றம்
ஷியாம் லால் யாதவ் என்ற நபருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, சிறிய கட்டி ஒன்று உருவானது. ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அருகிலுள்ள சவரத் தொழிலாளியிடம் அவ்வப்போது வெட்டச் செய்து வந்துள்ளார். ஆனால் காலப்போக்கில் அதன் வளர்ச்சி கட்டுப்பாடின்றி அதிகரித்து, ‘செபாசியஸ் ஹார்ன்’ எனப்படும் அரிய வடிவத்தை எடுத்தது.
மருத்துவ ரீதியாக என்ன இது?
மருத்துவர்களின் விளக்கப்படி, இது கெரட்டின் எனப்படும் புரதத்தால் உருவாகும் ஒரு அபூர்வ கட்டி. பொதுவாக நகம், முடி போன்றவற்றில் காணப்படும் இதே பொருள், சில நேரங்களில் தோலில் இவ்வாறு குவிந்து வளரக்கூடும். முகம், காது, கை அல்லது தலையில் இப்படியான கட்டிகள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. சிலர் இதை ‘Devil’s horn’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
அறுவை சிகிச்சை மற்றும் தற்போதைய நிலை
கட்டியின் அளவு அதிகரித்து சிரமம் ஏற்பட்டதால், சாகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு டாக்டர் விஷால் கஜ்பியே தலைமையிலான நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து அதை முழுமையாக அகற்றினர். பின்னர் தோல் ஒட்டுதல் முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 10 நாட்கள் கண்காணிப்பில் இருந்த அவர், தற்போது நலமடைந்துள்ளார். திசு பரிசோதனையில் புற்றுநோய் பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இத்தகைய பெரிய அளவிலான கட்டி மிகவும் அரிது என்பதால், இந்தச் சம்பவம் சர்வதேச மருத்துவ இதழிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மருத்துவ வட்டாரங்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மது போதையில் உணவு சாப்பிடும் போது நடந்த அதிர்ச்சி! 8 வருஷமாக தொண்டையிலேயே இருந்த அந்த பொருள்.... மருத்துவர்களே மிரண்டுபோன அதிர்ச்சி சம்பவம்!!!