ஆக்ரோஷத்தால் செய்த அட்டூழியம்! நள்ளிரவில் சொகுசு காரில் வந்து கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல்! காரணத்தை கேட்டா ஆடிப்போய்ருவீங்க.... சிசிடிவியில் சிக்கிய காட்சி!!!



lucknow-panipuri-dispute-shop-fire-incident

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பானிபூரி தொடர்பான சிறிய தகராறு, கடை எரிப்பு வரை சென்றுள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பானிபூரி தகராறில் தொடங்கிய வாக்குவாதம்

லக்னோவில் உள்ள ‘ஸ்வீட்ஸ்’ கடைக்கு சொகுசு காரில் வந்த சில இளைஞர்கள், பானிபூரி சாப்பிட்டபின் கூடுதல் பப்படம் கேட்டுள்ளனர். இதனால் கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலின்படி, அப்போது அவர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் மீண்டும் வந்து தாக்குதல்

இதையடுத்து, ஆத்திரம் அடங்காமல் அதே இளைஞர்கள் நள்ளிரவு 1:45 மணியளவில் மீண்டும் வந்துள்ளனர். அவர்கள் கடை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால் கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் 3 முதல் 4 சுற்று துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் அருகிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பீதி நிலையை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: நடுத்தெருவில் குழந்தைகள் விளையாடும் போது நடந்த பயங்கரம்! அலறி அடித்து சிதறி ஓடும் குழந்தைகள்... கொலை நடுங்க வைக்கும் வீடியோ..!!

சிசிடிவி ஆதாரத்தின் பேரில் விசாரணை

இந்த தாக்குதல் முழுவதும் கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட கடைக்காரர் விவேக் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், மாட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிறிய கருத்து வேறுபாடு கூட எவ்வாறு பெரிய குற்றமாக மாறுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இடையே பாதுகாப்பு குறித்த கவலைவும் அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: நொடியில் முடிந்தது இளையரின் வாழ்க்கை! பெட்ரோல் பங்கிற்குள் அதிவேகத்துடன் புகுந்த பைக்! அடுத்து நடந்த பயங்கரம்! திக் திக் சிசிடிவி காட்சி!!!