லொள்.. லொள் குரைத்து கொண்டே இருந்த நாய்கள்! குளியலறை கதவை திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி! பதுங்கியிருந்த அந்த ஆபத்தான விலங்கு.. வைரலாகும் திகிலூட்டும் வீடியோ..!!!
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீளமுள்ள முதலை புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்த வனத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு முதலையை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்தினர்.
நாய்கள் குரைத்ததால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்
சோஜித்ரா தாலுக்காவிற்கு உட்பட்ட த்ரம்போவாட்-கதியாரபுரா பகுதியில், பாலாபாய் சௌகான் என்பவரின் குடும்பம் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டின் வெளியே நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் சந்தேகமடைந்த அவர், வீட்டைச் சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார். பின்னர் குளியலறை கதவைத் திறந்தபோது, அங்கு 7 அடி முதலை அமைதியாக அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஒரு மணி நேரம் நீடித்த மீட்பு பணி
இதையடுத்து குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், உடனடியாக வனத்துறையினருக்கும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நிபுணர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி முதலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பாதுகாப்பாக ஏரியில் விடுவிக்கப்பட்ட முதலை
மீட்கப்பட்ட முதலை பின்னர் அருகிலிருந்த ஏரிப் பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ராட்சத டவர் கிரீனில் சிக்கி பகல் முழுக்க காற்றில் தொங்கிய வாலிபர்! 60 மீட்டர் உயரம்.... இரவில் தான் மீட்பு! திக் திக் வீடியோ..!!!