ஓட்டலில் தங்கிய இளம் காதல் ஜோடி! காதலன் எடுத்த திடீர் முடிவு - விசாரனையில் வெளியான திடுக்கிடும் உண்மை.

ஓட்டலில் தங்கிய இளம் காதல் ஜோடி! காதலன் எடுத்த திடீர் முடிவு - விசாரனையில் வெளியான திடுக்கிடும் உண்மை.


Lover died

மும்பையை சேர்ந்த இளைஞர் விஜயகுமார் (24).இவர் சந்தியா(22)என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இதற்கிடையில் விஜயகுமாருக்கு சந்தியா மீது சந்தோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது சந்தியா தன்னை விடுத்து வேறு ஒரு நபருடன் நெருங்கிப் பழகி வருகிறார் என நினைத்துள்ளார். அதனால் ஒரு சந்தியாவை தனியாக அழைத்து கொண்டு சென்று ஓட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.

Mumbai

அப்போது விஜயகுமார் காதலியை கழுத்தால் நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் அவர் அங்கிருந்து சென்று ஓடும் லாரியின் மீது பாய்ந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கால் முறிந்த நிலையில் உயிர் தப்பியுள்ளார்.

இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் அறையிலிருந்து யாரும் வெளிவராததால் சந்தேகம் அடைந்து மாற்று சாவியை கொண்டு கதவை திறந்துள்ளனர். அப்போது அங்கு சந்தியா இறந்து கிடந்துள்ளார். அதன்பின் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில் ஈடுபட்ட போலீசார் காதலனை சிகிச்சைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.