மெட்ரோவில் திடீர் மோதல்! RPF பெண் ஊழியருடன் குடுமிப்பிடி சண்டையிட்ட பெண்கள்.. வைரல் வீடியோ!



kolkata-metro-station-right

கொல்கத்தா நேதாஜி பவன் மெட்ரோ ரயில் நிலையத்தில், இரண்டு பெண் பயணிகளுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் RPF ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில், இரண்டு பெண் பயணிகள் மெட்ரோ நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களது உடமைகளை சோதனை செய்வது தொடர்பாக RPF ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் வாய்த்தகராறாக இருந்த இந்த விவகாரம், பின்னர் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. 

இரு பெண் பயணிகளும் RPF பெண் ஊழியருடன் மோதிக்கொண்டதுடன், ஒருவரையொருவர் பிடித்து இழுத்து தாக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தை கட்டுப்படுத்த மெட்ரோ ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக தலையிட்டனர். 

இதையும் படிங்க: கணவனை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலனை பார்க்க சென்ற மனைவி! நடுரோட்டில் அடித்து எட்டி உதைத்த கொடூரன்....! அதிரவைக்கும் பின்னணி காரணம்....! பகீர் வீடியோ..!!!