மொழிகளை கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்ற புஷ்பா 2 படத்தின் பாடல்..!
30 நிமிடங்களில் 23 முறை.. மாணவரை மனசாட்சியின்றி வெளுத்து வாங்கிய ஆசிரியர் கைது.!
30 நிமிடங்களில் 23 முறை.. மாணவரை மனசாட்சியின்றி வெளுத்து வாங்கிய ஆசிரியர் கைது.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ஓயிட்பீல்டு அருகே சன்னசந்திரா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது டைரியில் வழிமுறைகளை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சுமார் 30 நிமிடங்களில் 23 முறை ஆசிரியர் மாணவரை பலமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உண்மை அம்பலமாகவே, ஆசிரியரை கைது செய்த அதிகாரிகள் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர்.