மீனவர்களுக்கும் ஒர்க் பிரம் ஹோம்... மழை வெள்ளத்தால் வீட்டிற்குள் வந்த மீன்கள்.!

மீனவர்களுக்கும் ஒர்க் பிரம் ஹோம்... மழை வெள்ளத்தால் வீட்டிற்குள் வந்த மீன்கள்.!


in House Due to Rain Fishes Arrived Video Goes Viral about Fisherman Work From Home Job

இந்தியா முழுவதும் நடப்பு வருட பருவ மழை நல்ல மழைபொழிவை தந்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகளவு பெய்த மழை காரணமாக, பல்வேறு மாநிலங்களில் 20 வருடங்களில் இல்லாத அளவு வெள்ளம் செல்கிறது. 

தமிழகத்தில் பருவமழைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் 25 வருடங்களில் இல்லாத மழை பெய்து, நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. பல்வேறு ஊர்களில் நீர் சூழ்ந்துள்ளது. 

fish

சென்னையில் அடுத்தடுத்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்கள் வீதிகளில் தேங்கி, போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தேங்கிய மழைநீரில், மீன்களும் தென்பட்டன. 

பாலாற்றில் 90 வருடங்களில் இல்லாத வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், மீன்கள் வெள்ள நீரினால் வீட்டில் தேங்கியுள்ள மழை நீரில் வீட்டிற்குள் இருக்கிறது. இந்த விடியோவை பதிவு செய்துள்ள நபர், மீனவர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தாகிவிட்டது என கூறியுள்ளார்.