என் புள்ளைய விட அவன் தான் உங்களுக்கு முக்கியமா? இதுல பெயரை வேற பச்சை குத்திய தாத்தா... ஆத்திரத்தில் 4 வயசு சிறுவனுக்கு ஆசிட்டை குடிக்க கொடுத்த பெண்! பதறவைக்கும் காட்சி!!!
ஐதராபாத்தில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட மனக்கசப்பு அதிர்ச்சிகரமான திருப்பம் எடுத்துள்ளது. நான்கு வயது சிறுவனுக்கு ஆசிட் கொடுத்து கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். தற்போது அந்தச் சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
குடும்பத்திற்குள் பெருகிய மனக்கசப்பு
ஐதராபாத் போடுப்பல் பகுதியில் உள்ள சீனிவாச காலனியில் கூட்டுக் குடும்பம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வந்த மஞ்சுளா என்ற பெண், தனது மகனை விட மூத்த அக்காவின் மகனுக்கு குடும்பத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நீண்டநாளாக குற்றம் சாட்டி வந்துள்ளார்.
சமீபத்தில், குடும்பத்தின் தாத்தா தனது மூத்த பேரனின் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டது மஞ்சுளாவின் கோபத்தை மேலும் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... 6 வயது சிறுவனின் காதை கடித்துத் துப்பிய பிட்புல் நாய்! குழந்தை அலறி துடித்து ஓடினாலும் அந்த நாய் விடல...பகீர் காட்சி!
சாக்லேட் ஆசையில் சிக்கிய சிறுவன்
இதையடுத்து பழிவாங்க முடிவு செய்த மஞ்சுளா, சம்பவத்தன்று அந்தச் சிறுவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சாக்லேட் தருவதாக சொல்லி அவரை ஏமாற்றிய பிறகு, ஜூஸ் என்று கூறி ஆசிட் கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.
வலியால் அலறிய சிறுவனின் சத்தம் கேட்டு ஓடிய வந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பு தொடர்கிறது.
போலீஸ் நடவடிக்கை மற்றும் அதிர்ச்சி தகவல்கள்
சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மஞ்சுளாவை கைது செய்துள்ளனர். விசாரணையில், இதற்கு முன்பும் அந்தச் சிறுவனை காயப்படுத்த முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குடும்பத்திற்குள் ஏற்பட்ட விரிசல், ஒரு பிஞ்சின் உயிரையே ஆபத்தில் தள்ளியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Hyderabad crime சம்பவமாக இது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
A shocking case of child abuse has emerged from Hyderabad, where a four year old boy was allegedly forced to consume acid by a close family member in Boduppal. The incident has raised serious concerns about child safety within households.
According to police officials, the… pic.twitter.com/yq22izKq8w
— Hate Detector 🔍 (@HateDetectors) April 16, 2026
இதையும் படிங்க: தெருவில் விளையாடிய 10 வயது சிறுவனை திடீரென தாக்கி தூக்கி வீசிய மர்ம நபர்! கொலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!!