ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து வெளியான புதிய தகவல்! அப்படி அதிகாலையில் என்ன தான் நடந்தது!

ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து வெளியான புதிய தகவல்! அப்படி அதிகாலையில் என்ன தான் நடந்தது!



Hyderabad encounter

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமாக கற்பழிப்பு பின் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் 27 ஆம் தேதி புதன் கிழமை மாலை அரங்கேறியது. இதில் முகமது ஆரிப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவமானது ஹைதராபாத் சத்தனபள்ளி டோல் கேட் பக்கத்தில் இந்த கொலை நடந்துள்ளது. இதனை குறித்து ஹைதராபாத் போலீசார் குற்றவாளிகளிடம் எந்த ஒரு விசாரனையும் செய்யாமல் இருந்துள்ளது. பொதுவாக போலீசார் அடுத்த கைதான குற்றவாளிகளிடம் அனைத்தையும் எப்படி நடந்தது என்று உடனே கேட்டு தெரிந்து கொள்வர்.

Hyderabad

ஆனால் கைதான அந்த நான்கு பேரிடமும் எந்த ஒரு விசாரனையும் செய்யாமல் இருந்த போலீசார் நேற்று இரவு குற்றவாளிகளை தூக்கவிடாமல் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இவர்களை விசாரிக்க தனி படைகள் எல்லாம் அமைப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த 4 குற்றவாளிகளையும் சம்பவ இடத்திற்கு அழைத்து கொலை எப்படி நடந்தது என்று விளக்குமாறு கூறியுள்ளனர். அப்போது விளக்கமளித்து கொண்டிருந்த குற்றவாளிகள் திடீரென தப்பித்து செல்ல முயற்சித்து உள்ளனர்.

Hyderabad

உடனே போலீசார் அவர்களில் நெற்றி மற்றும் அடிவயிற்று பகுதியில் சுட்டு என்கவுண்டர் செய்துள்ளனர்.