விவாகரத்து செய்த மனைவியை, தேடி வந்து முன்னாள் கணவர் செய்த காரியம்! பகீர் சம்பவம்!!

விவாகரத்து செய்த மனைவியை, தேடி வந்து முன்னாள் கணவர் செய்த காரியம்! பகீர் சம்பவம்!!


husband-killed-divorced-wife-with-children-in-agra

உத்திரபிரதேசம் ஆக்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது நிறைந்த ரேகா ரத்தோர். இவர் தனது கணவர் சுனில் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, விவாகரத்து செய்துவிட்டு தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவரது கணவர் சுனிலும் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். ரேகா அப்பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த போதிலும் கணவர் சுனில் அவ்வப்போது ரேகாவிடம் தகராறு மேற்கொண்டு பிரச்சினை செய்து வந்துள்ளார்.

Husband

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரேகா மற்றும் அவரது 3 குழந்தைகளும் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து  போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரேகா மற்றும் அவரது குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் முன்னாள் கணவரே குடும்ப தகராறின் காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்திருக்கலாம் என அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.