முத்தலாக் கூறி மனைவியை விரட்டிய கணவர்.! கதறியபடி இளம்பெண் கூறிய காரணத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார்!!

முத்தலாக் கூறி மனைவியை விரட்டிய கணவர்.! கதறியபடி இளம்பெண் கூறிய காரணத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார்!!



husband-divorce-wife-for-giving-birth-to-girlbaby

உத்தரபிரதேசத்தின் அயோத்தியா நகர் ஐதர் கஞ்ச்  பகுதியை சேர்ந்தவர் ஜாப்ரின் அஞ்சும் . 23  வயது நிறைந்த இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  மகாராஜ்கஞ்ச், நகத்வாரா கிராமத்தை சேர்ந்த ஆஸ்திகர் அகமது என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், கர்ப்பமாகி இருந்த ஜாப்ரின்க்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்குழந்தை பெற்றெடுத்ததற்காக ஜாப்ரின்க்கு ஆஸ்திகர் முத்தலாக் வழங்கியுள்ளார்.  

muthalaq

இதனால் அதிர்ச்சியடைந்த ஜாப்ரின் தனது கணவர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் எனக்கு ஆஸ்திகருடன் கடந்த ஆண்டு திருமணமா நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமணம் முடிந்த முதல்மாதத்தில் இருந்தே எனது கணவர் எனது தாய்வீட்டில் வரதட்சணை வாங்கி வரும்படி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.  

ஆனால்,மிகவும் கஷ்டத்தில் இருந்த  எனது தந்தையால் அவர்  கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.  இதனால் நாளுக்கு நாள் அவரது கொடுமை அதிகரித்தது. இந்நிலையில் சமீபத்தில்  எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனால் வெறுப்படைந்த எனது கணவர் எனக்கு முத்தலாக் வழங்கியுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.