பாலியல் கொடுமையால் மயங்கிக்கிடந்த மகள்..! மருத்துவமனை உதவி செய்யாததால், மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை..!

பாலியல் கொடுமையால் மயங்கிக்கிடந்த மகள்..! மருத்துவமனை உதவி செய்யாததால், மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை..!



hospital-refused-to-give-wheel-chair-for-abused-girl

பாலியல் கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த தனது மகளை தந்தை தோழில் சுமந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெல்லாரியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

யாரோ சிலரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, மயங்கி கிடந்த தனது மகளை, அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். நடக்க முடியாமல் இருந்த தனது மகளுக்காக அவரது தந்தை சக்கர நாற்காலி கேட்டுள்ளார்.

இது சட்ட சிக்கல்கள் ஏற்படுத்தக்கூடிய விவகாரம், எனவே நாற்காலி தர முடியாது என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மகளை தோழில் சுமந்தபடி அவரது தந்தை தூக்கி சென்று சிகிச்சை கொடுத்ததாக கூறப்படுகிறது.