குடிபோதையில் போட்ட கும்மாளம்.....நொடியில் உயிரே போயிருக்கும்! அலறிய மக்கள் கூட்டம்! இறுதியில் இளையர்களின் துணிச்சல்....திக் திக் வீடியோ..!!!
உத்தரப்பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கொண்டாட்ட உற்சாகம் அதிகரித்திருந்த நிலையில், ஒரு வாலிபர் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த ஹோலி தீக்குள் குதித்த சம்பவம் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
ஹோலி தீக்குள் திடீர் குதிப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகா நந்த்ரோலி கிராமத்தில் நேற்று இரவு பாரம்பரிய முறையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வழக்கம்போல் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஹோலி தீ மூட்டி வழிபாடு செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கிராம மக்கள் தீயைச் சுற்றி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத விதமாக அந்த வாலிபர் நேராக எரிந்து கொண்டிருந்த தீக்குள் சென்று நின்றார். இதைக் கண்ட மக்கள் சில நொடிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப் போனார்கள்.
இதையும் படிங்க: புனித யாத்திரை முடிந்து வீடு திரும்பிய குடும்பம்! கிச்சனில் கேட்ட முனகல் சத்தம்! எக்ஸாஸ்ட் ஃபேனில் சிக்கித் தவித்த திருடன்! வைரலாகும் வீடியோ!!
இளைஞர்களின் துணிச்சல்
பின்னர் உடனடியாக சுதாரித்த சில இளைஞர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் தீக்குள் பாய்ந்து, அந்த வாலிபரை வெளியே இழுத்து கொண்டு வந்தனர். சில விநாடிகள் கூட தாமதமாகியிருந்தால் அந்த வாலிபரின் உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரல் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பண்டிகை கொண்டாட்டங்களில் பாதுகாப்பை மறந்து இவ்வாறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று அந்த வாலிபரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பண்டிகைகள் மகிழ்ச்சியை பகிர்வதற்கானவை என்றாலும், அதே நேரத்தில் பாதுகாப்பும் பொறுப்பும் அவசியம் என்பதைக் நினைவூட்டும் சம்பவமாக இந்த ஹோலி தீ விபத்து பார்க்கப்படுகிறது.
यूपी – संभल में होलिका दहन के बीच हैरान कर देने वाला नजारा। आग की लपटों के बीच एक शख्स खड़ा हो गया। भीड़ सन्न…कुछ सेकंड की दहशत। फिर एक युवक ने हिम्मत दिखाई। उसे बाहर खींचा गया और घटना टल गई। pic.twitter.com/erbPRqdJzd
— INDIAN (@_4Nation__) March 5, 2026
இதையும் படிங்க: நடுத்தெருவில் குழந்தைகள் விளையாடும் போது நடந்த பயங்கரம்! அலறி அடித்து சிதறி ஓடும் குழந்தைகள்... கொலை நடுங்க வைக்கும் வீடியோ..!!