வலுக்கட்டாயமாக பசுவின் வாயில் மதுவை ஊற்றி..... குடிகார கும்பல் செய்த கொடூர வீடியோ! கொந்தளிப்பில் மக்கள்...!!!



haryana-holi-cow-alcohol-animal-cruelty-video-viral

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், ஹரியானாவில் நடந்ததாக கூறப்படும் ஒரு பசு வன்கொடுமை சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ, விலங்குகளுக்கு எதிரான கொடூரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஹோலி கொண்டாட்டத்தில் சர்ச்சை

ஹரியானாவில் மது போதையில் இருந்ததாக கூறப்படும் சிலர், மாட்டு வண்டியில் அமர்ந்து கொண்டு பசுவை வலுக்கட்டாயமாக இழுக்க வைத்துள்ளனர். அதோடு, அந்த வாயில்லா ஜீவனின் வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து மதுபானம் ஊற்றியதாகவும் வீடியோவில் தென்படுகிறது. அருகில் இருந்த மற்றவர்கள் இதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பார்ப்போரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

வைரலான வீடியோ

‘StreetdogsofBombay’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வைரல் வீடியோ, பதிவேற்றப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே 36,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை கண்ட இணையவாசிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தண்ணீரிலும் கலப்படம்.... ரயில் பயணிகளே பிராண்டட் மினரல் வாட்டர் பாட்டிலில் அசுத்தமான தண்ணீரை நிரப்பி விற்கும் அதிர்ச்சி காட்சி!

சட்ட நடவடிக்கை கோரிக்கை

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விலங்கு வன்கொடுமைச் சட்டம் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஹரியானா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பண்டிகை காலங்களில் கூட விலங்குகள் மீது இத்தகைய கொடுமைகள் நடைபெறுவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் பொறுப்பற்ற செயல்கள் காரணமாக உயிரினங்கள் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கைகளும், சமூக விழிப்புணர்வும் அவசியம் என்பதே பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.