அட பாவி!! இது ஒரு குத்தமா?? மணப்பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்..
அட பாவி!! இது ஒரு குத்தமா?? மணப்பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்..
திருமணத்தில் உறவினர்களுக்கு மட்டன் போடாததால் மணமகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த புதன் கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமண நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகன் தனது உறவினர்களுடன் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த மணமகனின் வீட்டாருக்கு பெண் வீட்டார் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
இதனை அடுத்து மணமகன் வீட்டாருக்கு பெண் வீட்டார் மத்திய விருந்தளித்தனர். ஆனால் மத்திய விருந்தில் மட்டன் போடவில்லை என கோபித்துக்கொண்டு மணமகன் தனது உறவினர்களுடன் பெண் வீட்டில் இருந்து வெளியேறி, உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் மணமகன் தனக்கு நிச்சயம் செய்த பெண் இல்லாமல், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மீண்டும் ஒடிசாவுக்கு சென்றுள்ளார். விருந்தில் மட்டன் போடவில்லை என்பதால் மணமகன் திருமணத்தை நிறுத்தியது மட்டுமில்லாமல், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.