நள்ளிரவில் திருட வந்த வீட்டில் திக்குமுக்காடிய திருடன்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க... வைரல் வீடியோ!!!
உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் நள்ளிரவில் நடந்த ஒரு திருட்டு முயற்சி எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. வீட்டிற்குள் புகுந்த நபர், தப்பிக்க முயன்றபோது கதவிலேயே சிக்கி பொதுமக்களிடம் பிடிபட்டார். தற்போது இந்த திருடர் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நள்ளிரவு நுழைவு... சத்தம் கேட்டதும் பதற்றம்
தகவலின்படி, சம்பவம் நடந்தது நள்ளிரவு நேரத்தில். வீட்டு உரிமையாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு விழித்த வீட்டார் உடனே கூச்சல் போட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் விரைவாக அங்கு திரண்டனர்.
தப்பிக்க முயன்ற போது சிக்கிய திருடன்
மக்கள் கூடிவிட்டதை பார்த்ததும் பயந்த அந்த நபர், பிரதான கதவைத் தாண்டி குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் கதவிலிருந்த கூர்மையான இரும்புக் கம்பிகளில் அவரது கால்கள் சிக்கிக்கொண்டன. நகர முடியாமல் தலைகீழாக தொங்கிய நிலையில் அவர் வலியால் அலறியதாக கூறப்படுகிறது.
போலீசாரிடம் ஒப்படைப்பு... வைரலான வீடியோ
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை கீழிறக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. திருட முயன்ற இடத்திலேயே சிக்கிய இந்த viral video தற்போது இணையத்தில் பரவி, பலரும் அதிர்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
#UttarPradesh #Ghaziabad: A thief broke into a house. People raised an alarm. The thief had to flee.
While leaving the house, the thief got caught in the sharp bars of the gate. People gathered, caught the thief, and handed him over to the police.
1/2 pic.twitter.com/jpM6wpz8ZM— Siraj Noorani (@sirajnoorani) April 23, 2026