#BREAKING முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்.!

#BREAKING முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்.!



former-mp-passed-away

பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா டெல்லியில் நேற்று இரவு காலமானார். 

சந்தன் மித்ரா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது மகன் குஷன் மித்ரா டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த மித்ரா, ஜூலை 18, 2018 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார்.

மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா ட்விட்டரில் தனது நெருங்கிய நண்பரை இழந்ததாக தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், எனது நெருங்கிய நண்பர்-முன்னோடி ஆசிரியர் மற்றும் முன்னாள் எம்.பி சந்தன் மித்ராவை இன்று காலை இழந்தேன். நாங்கள் லா மார்டினியரின் மாணவர்களாக ஒன்றாக இருந்தோம். மேலும் செயின்ட் ஸ்டீபன் மற்றும் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றோம். 


நாங்கள் ஒரே நேரத்தில் பத்திரிகைத் துறையில் சேர்ந்தோம், அயோத்தியின் உற்சாகத்தையும், காவி அலையையும் பகிர்ந்து கொண்டோம். மேலும், 1972 இல் பள்ளி பயணத்தின் போது சந்தன் மித்ராவும் நானும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் மை டியர் நண்பரே. ஓம் சாந்தி! என்று தாஸ்குப்தா கூறியுள்ளார்.