அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.!

அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.!



fire-accident-in-maharastra-hospital

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு  அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.