இ.எம்.ஐ டார்ச்சர் விபரீதம்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவசாயி.!!



farmer-sets-fir-on-tractor-due-to-finance-emi-pressure-

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திம்மாஜிபேட்டை பகுதியில் வசித்து வருபவர் கட்டம் ரவி. விவசாயியான இவர் எல்&டி என்ற நிதி நிறுவனத்தில் தவணை முறையில் டிராக்டர் வாங்கி இருக்கிறார். 

இ.எம்.ஐ தொகை

ஒவ்வொரு மாதமும் தவணை தொகை செலுத்தப்பட வேண்டும் என்ற நிலையில், இ.எம்.ஐ தொகையாக ரூ.98,000 செலுத்தி வந்துள்ளார். ஆனால் இம்மாதம் ரூ.80,000 மட்டுமே அவரால் செலுத்த முடிந்துள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பளார் விட்ட காவல் அதிகாரி; அதிர்ச்சி வீடியோ.!!

பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவசாயி

இதனை தொடர்ந்து நிதி நிர்வாகத்தினர் விவசாயியின் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் அவரை அவதூறாக பேசி திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி டிராக்டரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

வீடியோ


 

இதையும் படிங்க: மரணத்தின் பிடியில் சிறுமி.. பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்.!!