மரணத்தின் பிடியில் சிறுமி.. பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்.!!



madhyapradesh parents killed baby fasting due to brain tumour

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியைச் சார்ந்த இளம் தம்பதிக்கு மகள் ஒருவர் இருக்கிறார். 3 வயதாகும் சிறுமி மூளை பாதிப்பால் வெகுநாட்களாக கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக தெரிய வருகிறது.

ஜெயின் மத சடங்கு

இதனால் அவர்கள் தங்களால் இயன்ற மருத்துவ சிகிச்சை கொடுத்து வந்த நிலையில், அவர் உயிர்பிழைக்க மாட்டார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயின் மத சடங்கின்படி குழந்தைக்கு உணவு கொடுக்காமல் பெற்றோர் உயிரிழக்க வைத்த சோகமும் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: பீரியட்ஸ் அப்ப ஏண்டி சமைச்ச? மனைவி கழுத்தை நெரித்துக்கொலை..!

Murder

குடும்பமாக சேர்ந்து முடிவு

இந்த விஷயத்திற்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான கண்டனம் குவிந்து வரும் நிலையில், சிறுமியின் உடல் நலம் மிகவும் மோசமான காரணத்தால் குடும்பத்தினர் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

உலக சாதனை

தம்பதிகள் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி குழந்தையை கருணைக்கொலை செய்யத்துணிந்தது மிகவும் கொடுமையான மற்றும் வருத்தமளிக்கும் விஷயம் என்றாலும், அதை வைத்து உலக சாதனை படைப்பதாக அறிவிப்புகளும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை சந்தித்துள்ளது. குழந்தைக்கு செய்யும் கைமாறு என பெற்றோர் அவ்விருதை பெற்றுக்கொண்டாலும் உலகம் பொதுப்பார்வையில் அதனை அணுகி தம்பதியை வறுத்தெடுத்து வருகிறது.

இதையும் படிங்க: அனாதை இல்லத்தில் சேர மறுத்த மாமியார்-மாமனாரை சரமாரியாக தாக்கி கொடூரம் செய்த மருமகள்..!