பீரியட்ஸ் அப்ப ஏண்டி சமைச்ச? மனைவி கழுத்தை நெரித்துக்கொலை..!



women suspicious died during period and prepare food for in law family

நாம் வாழும் உலகில் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்கள் ஏராளம். அதிலும் கிராமங்களில் நடக்கும் கொடுமையையும், அந்த நாட்கள் என தொடரும் அவலத்தையும் என்றுதான் மாற்றுமோ இந்த உலகம் என்ற கேள்வியைத்தான் எழுப்பியுள்ளது இந்த சோக சம்பவம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் வசித்து வருபவர் காயத்ரி கோலி (வயது 26). பெண்ணுக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

மாதவிடாய் தகராறு

இதனிடையே சம்பவத்தன்று காயத்ரி கோலிக்கு மாதவிடாய் என கூறப்படுகிறது. அப்போது அவர் குடும்பத்தினருக்கு தேவையான உணவுகளையும் சமைத்து கொடுத்த  நிலையில், இதுகுறித்து அறிந்த கணவர் மற்றும் மாமியார் தகராறு செய்துள்ளனர். 

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் கட்டிலில் இருந்த மனைவி.. கூறுபோட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கணவன்.!!

suspicious dead

பெண் தற்கொலை?

மேலும் பெண்ணையும் கடுமையாக தாக்கியதால் மனமுடைந்த காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காயத்திரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கழுத்து நெரித்து கொலை?

மேலும் மாமியார் மற்றும் கணவர் காயத்ரியின் கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை தேடி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் கட்டிலில் இருந்த மனைவி.. கூறுபோட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கணவன்.!!