இளம்பெண்ணுக்கு பளார் விட்ட காவல் அதிகாரி; அதிர்ச்சி வீடியோ.!!



uttarkhand police slaps a women due to not wearing helmet video gone viral

இளம்பெண்ணை காவல் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சோதனையில் ஈடுபட்ட போலீசார்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால், ராம்கரில் உள்ள சோதனை சாவடியில் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை காவல்துறையினர் நிறுத்திய நிலையில், டெல்லியை சேர்ந்த சுற்றுலாப்பயணியான பெண்ணையும் நிறுத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: பெட் கட்டி மொடாக்குடி; குழந்தை பிறந்த 8 நாட்களில் எமலோகத்திற்கு டிக்கெட்.!!

ஆத்திரமடைந்த போலீஸ்

இதனால் பெண் வாக்குவாதத்தில் ஈடுபடவே, வீடியோ எடுத்ததால் ஆத்திரமடைந்த காவல் அதிகாரி அவரது கேமரா மற்றும் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதுகுறித்து வீடியோவில் பேசிய பெண், "நான் மற்றும் எனது நண்பர்கள் டெல்லியில் இருந்து வந்துள்ளோம். ஹெல்மட் அணியாத ஒரே காரணத்திற்காக  இப்படி நிறுத்தி வைத்தனர்" என்று கூறி வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் கசிந்த வீடியோ

நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், ஹெல்மட் அணியாததற்காக ஒரு பெண்ணை எப்படி காவல் அதிகாரி கன்னத்தில் அறையலாம்? என்ற சரமாரி கேள்விகளுடன் நெட்டிசன்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: என்.சி.எல் நிலக்கரி நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு.! இன்றே விண்ணப்பியுங்கள்..!!