2 வருஷமா ஒரே டார்ச்சல்... 2 மாதமாக போட்ட பலே திட்டத்தால் தீட்டிய கத்தி! ஆசிரியை படுகொலையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!!



faridabad-school-teacher-murder-stalking-case

ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 21 வயதுடைய இளைஞர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஆசிரியையை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக காவல்துறையும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட தாக்குதல்

விசாரணையில் கிடைத்த தகவலின்படி, தாக்குதலை நடத்துவதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதற்காக அவர் பிரத்யேகமாக கத்தி ஒன்றை வாங்கி வைத்திருந்ததாகவும், அதையே பயன்படுத்தி ஆசிரியையை தாக்கியதாகவும் காவல்துறை விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியயை வெளியே கூப்பிட்ட மர்ம நபர்! அடுத்த நொடி ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...! பள்ளி வாசலிலேயே நடந்த கொடூரம்....!!!

முன்கூட்டியே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை?

உயிரிழந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொல்லை அளிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் காவல்துறையின் செயல்பாடு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

விசாரணை தீவிரம்

இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த தாக்குதல் ஃபரீதாபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பலரும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ஆசிரியயை வெளியே கூப்பிட்ட மர்ம நபர்! அடுத்த நொடி ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...! பள்ளி வாசலிலேயே நடந்த கொடூரம்....!!!