குடிபோதையில் நடுரோட்டில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்! நான் ஒரு அரசு ஊழியர்... அதிக சம்பளம் வாங்குறேன் என அடாவடி பேச்சு! வைரலாகும் பெண்ணின் ரகளை வீடியோ..!!!
ஹரியானா மாநிலம் ஹிசாரில், மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் பிஸியான சாலையின் நடுவே காரை நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சாலையை முடக்கிய கார்... நெரிசலில் சிக்கிய பொதுமக்கள்
தகவலின்படி, அந்தப் பெண் திடீரென சாலையின் நடுவே தனது காரை நிறுத்தியதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நிலையை சீர்செய்ய முயன்றவர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் ஏற்பட்ட குழப்பம் சில நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வறுமையால் பிரிந்த காதல் தம்பதிகள்! கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்! பரபரப்பு சம்பவம் !!!
“நான் அரசு ஊழியர்” என அடாவடி பேச்சு
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், மதுபோதையில் இருந்த அந்தப் பெண், தன்னை அரசு ஊழியர் என்றும் அதிக சம்பளம் பெறுவதாகவும் கூறி சத்தமாக பேசினார். அங்கிருந்தவர்களிடம் ஒருமையில் பேசியும் மிரட்டியதும் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. அவரது இந்த நடத்தை அங்கு இருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
வழக்குப் பதிவு... தொடர்ந்து நடவடிக்கை
இதையடுத்து, ஹிசார் காவல்துறையினர் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்தைத் தடுத்தது மற்றும் பொது இடத்தில் ஒழுங்குக்கேடாக நடந்துகொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பரவலான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
यह मोहतरमा नशे में पूरी तरह धुत्त है।
— नागौरी काका (@Rj21Nagur) April 13, 2026
हालात ऐसे हैं कि सड़क के बीचों-बीच अपनी गाड़ी लगा दी
और जब लोगों ने टोका तो उन्होंने अश्लील गालियां देना शुरू कर दिया।
पूरा वीडियो जरूर देखिए 👇 pic.twitter.com/pYFbzCqnE6
இதையும் படிங்க: என்னை விட்ருங்க.... நடுரோட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்த இன்ஸ்பெக்டர் ! லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்! வைரலாகும் வீடியோ!