காதலி, சகோதரரால் 16 வயது சிறுவன் கொடூர கொலை; சிறுமியின் திசைதிரும்பிய காதலால் நடந்த விபரீதம்.!

காதலி, சகோதரரால் 16 வயது சிறுவன் கொடூர கொலை; சிறுமியின் திசைதிரும்பிய காதலால் நடந்த விபரீதம்.!



Delhi Noida Teen Killed by Ex Girl friend Bother and New Lover

 

சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்ற சிறுவனால் காதலை கைவிட்ட சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் நகர் பகுதியில் வசித்து வந்த 18 வயது இளைஞர் யாமின். இவரின் தங்கை தன்னை16 வயது சிறுவனுடன் பழகி வந்ததாக தெரியவருகிறது. சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் சிக்கி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுவன் சிறைக்கு சென்றபின்னர், யாமினின் தங்கைக்கு சாஹில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு யாமின் ஆதரவும் அளித்துள்ளார். 

சிறையில் இருந்து விடுதலையாகி வந்த 16 வயது சிறுவன் தனது காதலியை சந்திக்க வந்தபோது, அவர் வேறொருவருடன் காதல் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தனது தரப்பு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

delhi

இந்த விவகாரம் யாமினின் சகோதரர் மற்றும் சாகிலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, அவர்கள் இருவரும் சேர்ந்து 16 வயது சிறுவனை கொலை செய்து உடலை அங்குள்ள மறைவான பகுதியில் விட்டு சென்றுள்ளனர். 

சில நாட்கள் கடந்து துர்நாற்றம் வீசி காவல் துறையினர் வந்து பார்த்தபோது சடலம் மீட்கப்பட்டது. நொய்டா காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஷாகில் மற்றும் யாமின் ஆகியோரை கைது செய்தனர்.