முட்டித்தூக்கிய காளை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. பரிதாப பலி.!

முட்டித்தூக்கிய காளை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. பரிதாப பலி.!



Delhi Man Died Bull Attack 


தெற்கு டெல்லியில் உள்ள திகிரி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவ்வப்போது மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் நடைபெற்று வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று குமார் (42) என்பவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்துகொண்டு இருந்தார். அச்சமயம் காளை ஒன்று அவரை கடுமையாக தாக்கியது. 

கொம்புகளால் குமாரை முட்டி தூக்கியத்தில், அவர் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகினார். அவரை காளையின் பிடியில் இருந்து விலக்க மக்கள் முயன்றபோதும் பலனில்லை. 

இதுகுறித்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.