திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் தீவைத்து கொலை?.. 23 வயது இளைஞர் மர்ம மரணத்தில் சர்ச்சை.!

திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் தீவைத்து கொலை?.. 23 வயது இளைஞர் மர்ம மரணத்தில் சர்ச்சை.!



  Delhi Man Died After Burning Injuries 

 

டெல்லியில் உள்ள வசீராபாத் பகுதியை சேர்ந்தவர் நயூமன் (வயது 23). ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பி.எஸ்.சி பயின்று முடித்த உறவினர் பெண்ணுடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற சமீபத்தில் ஏற்பாடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று பெண்மணி நயூமனை வீட்டிற்கு அழைத்துள்ளார். 

அங்கு நயூமன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, 75% தீக்காயத்துடன் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவசர ஊர்தியின் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Delhi men

காவல் துறையினரிடம் அவர் அளித்த இறுதி வாக்குமூலத்தில், "தன்னை உறவினர் பெண் திருமணத்திற்கு வற்புறுத்தி, அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டார்" என கூறியுள்ளார். 

அதேவேளையில், இளம்பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, நயுமன் தான் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்தார் என கூறியுள்ளார். இதனால் விசாரணை நடந்து வருகிறது. 

வாக்குமூலத்தை கொடுத்த நயூமன் உயிரிழந்ததால், அதிகாரிகள் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.